ஐரோப்பா செய்தி

ரஷ்ய சிறையில் ஊழியர்களை பணயக் கைதிகளாக பிடித்துக் கொண்ட கைதிகள்

ஜூன் மாதம் முதல் நடந்த இரண்டாவது நிகழ்வில் தெற்கு வோல்கோகிராட் பகுதியில் உள்ள சிறைக் காலனியில் ரஷ்ய கைதிகள் ஊழியர்களை பணயக் கைதிகளாக பிடித்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பணயக் கைதிகளாக சிறை ஊழியர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறைச்சாலையின் ஒழுக்காற்று ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக பெடரல் சிறைச்சாலை சேவை மேலும் தெரிவித்துள்ளது.

“பணயக்கைதிகளை விடுவிக்க தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் விசாரணைக் குழு, “பல கைதிகள்” இதில் ஈடுபட்டதாகக் தெரிவித்தது.

தலைநகர் மாஸ்கோவிற்கு தெற்கே சுமார் 850கிமீ (530 மைல்) தொலைவில் உள்ள சுரோவிகினோ நகரில் IK-19 சிறைக் காலனி அமைந்துள்ளது.

ரஷ்ய சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள் நான்கு சிறைக் காவலர்கள் பணயக் கைதிகளாகக் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி