கைதிகளும் மனிதர்களே! அவர்களை கண்ணியத்துடன் நடத்துங்கள் – இலங்கை நீதவான்!

இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை விலங்குகள் போன்று நடத்த வேண்டாம் என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசான் அமரசேன அறிவுறுத்தியுள்ளார்.
திறந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் போது அவர்களை சங்கிலியால் பிணைக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தடுப்புக் காவலில் உள்ளவர்களும் மனிதர்கள் என்றும், அவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படத் தகுதியானவர்கள் என்றும் அவர் அதிகாரிகளுக்கு நினைவூட்டினார்.
நீதிமன்ற அறைக்குள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட சந்தேகநபர்கள் குழுவொன்றை அவதானித்த பின்னர் மேலதிக நீதவான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை முறையான நடைமுறைகளுக்கு அமைய நீதிமன்ற அறையில் வைக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
(Visited 49 times, 1 visits today)