ஐரோப்பா

சிறை கைதிகள் விடுதலை விவகாரம் : வெளிப்படை தன்மையின்றி செயற்படும் வெனிசுலா!

வெனிசுலாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

வெனிசுலாவின் தேசிய சட்டமன்றத் தலைவர், ‘அமைதியைத் தேடுவதற்கான’ ஒரு அடையாளமாக  கணிசமான கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என முன்னதாக தெரிவித்திருந்தார்.

இதற்கமைய மனித உரிமைகள் குழுவான ஃபோரோ பெனல் (Foro Penal) 56 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது.

இருப்பினும் வெனிசுலாவின் அரசாங்கம் ஆதாரங்களை முன்வைக்காமல் 400 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது அரசாங்கத்தின் வெளிப்படை தன்மை குறித்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை கடந்த ஜுலை மாதம் ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற ஒடுக்குமுறையின் கீழ், அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோருக்கு ஈடாக, வெனிசுலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 10 அமெரிக்க கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!