இலங்கை செய்தி

சிறை கைதிகள் தப்பியோட்டம் – மூவர் பணியிடை நீக்கம்

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நான்கு கைதிகள் கடந்த முதலாம் திகதி தப்பிச் சென்றதைத் தொடர்ந்து அங்கு கடமையில் இருந்த மூன்று அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

வெளி வளாகத்தை சுத்தம் செய்வதற்காக பத்து கைதிகளை வெளியில் அழைத்துச் செல்ல தலைமை சிறைச்சாலை அதிகாரி ஏற்பாடு செய்திருந்தார்.

இதன் போது நான்கு கைதிகள் தப்பி சென்றுள்ளனர்.

தப்பியோடிய கைதிகளில் நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களும் உள்ளனர், அவர்களில் ஒருவருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மேலும் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தப்பியோடிய கைதிகளில் மூவர் மீள கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை