ஆசியா

ஜப்பானில் அரிசி விலையால் கடும் நெருக்கடியில் சிக்கிய பிரதமர்

ஜப்பானில் அரிசியின் விலை கடந்த ஒரு ஆண்டில் இருமடங்காக உயர்ந்துள்ளது.

இந்த விலை ஏற்றம், பிரதமர் ஷிகெரு இஷிபா தலைமையிலான அரசுக்கு பெரும் நெருக்கடியைக் கிளப்பியுள்ளது.

சென்ற அக்டோபரில் பதவியேற்ற இஷிபா, வாழ்வைச் செலவுகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளார். வாடிக்கையாளர் வாழ்வில் நேரடியாக தாக்கம் செலுத்தும் அரிசி விலை உயர்வு, மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கை பெரிதும் பாதித்துள்ளது.

மேலும், ஆளுங்கட்சியைச் சுற்றியுள்ள ஊழல் விவகாரங்களும் இஷிபாவுக்கு அரசியல் தலைவலியாக மாறியுள்ளன.

வரும் வார இறுதியில் நடைபெற உள்ள மேலவை தேர்தலில், ஆளுங்கட்சி தனது பெரும்பான்மையை இழக்கக்கூடும் என கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

அவ்வாறு நடந்தால், இஷிபா தனது பதவியிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என்றே அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!