இலங்கை

சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதன்படி  400 கிராம் பால் பக்கெற் (லங்கா சதொச) ஒன்றின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன்  அதன் புதிய விலை 1030 ரூபாவாகும்.

1 கிலோ காய்ந்த மிளகாயின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1350 ரூபாவாகும்.

ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன்  அதன் புதிய விலை 325 ரூபாவுக்கு விற்கப்படும்.

1 கிலோ சோயா மீட் (மொத்த விலை) 10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ரூ.660 ஆக உள்ளது.

1 கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 129 ரூபாவாக காணப்படும்.

1 கிலோ வெள்ளை சீனியின் விலை 4 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலையான 239 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று (24) முதல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் எனவும் இலங்கை சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!