இலங்கை

இலங்கையில் உணவக உணவுகளின் விலை அதிகரிப்பு!

உணவக உணவுகளின் விலை  இன்று (02) நள்ளிரவு முதல்  அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ள அச்சங்கத்தின்  தலைவர்  ஹர்ஷன ருக்ஷான்  மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதீத அதிகரிப்பு காரணமாக அனைத்து உணவுப் பானங்களின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு பிளான்டி ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், பால் தேனீர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், சாதம் (அரிசி மற்றும் கறி) ஒன்றின் விலை 25 ரூபாவினாலும், பிரைடு ரைஸ் மற்றும் கொத்துவின் விலையை 25 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நுகர்வுப் பொருட்களின் விலையை அரசாங்கம் எந்த வகையிலும் குறைத்தால் அதற்கான நிவாரணம் மக்களுக்கு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

(Visited 33 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!