இலங்கை ஜனாதிபதி தேர்தல்: இன்னும் பிரசாரத்தை தொடங்காத 19 வேட்பாளர்கள்
குறைந்தபட்சம் 19 ஜனாதிபதி வேட்பாளர்கள் எந்தவொரு பிரச்சார நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFREL) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் PAFFREL இந்த வாரம் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளதாக லங்காதீப நாளிதழ் தெரிவித்துள்ளது.
பத்து வேட்பாளர்கள் மாத்திரமே தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை சமர்ப்பிப்பதற்கான நேரத்தைப் பெற்றுள்ள நிலையில், குறிப்பிட்ட வேட்பாளர்கள் கட்சி அலுவலகம் கூட அமைக்கவில்லை என பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
2024 ஜனாதிபதித் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர், பத்து வேட்பாளர்கள் மட்டுமே பிரச்சார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.





