இலங்கை

குத்தகைக்கு விடப்படவுள்ள ஜனாதிபதி மாளிகை!

நல்லாட்சி அரசாங்கத்துக்கு முன்னரான 2010 தொடக்கம் 2015 வரையிலான ஆட்சிக் காலத்தில் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட யாழ். ஜனாதிபதி மாளிகையை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையில் சுமார் 29 ஏக்கர் நிலப்பரப்பில் 12 ஏக்கரில் குறித்த ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய நிலப்பரப்பில் அப்பிரதேசங்களிலுள்ள மக்களிடமிருந்து பெறப்பட்ட காணிகளும் காணப்படுகின்றன. அவை தவிர அரசாங்கத்துக்கு சொந்தமான 12 ஏக்கர் காணியை தகவல் தொழிநுட்ப நிறுவனத்துக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 17 ஏக்கர் காணியையும், அவர்களுக்கு வருமானம் கிடைக்கும் வகையில் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தக் காணி கடற்படையினர் வசம் காணப்படுவதுடன் இதனை இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுவதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது

(Visited 10 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content