ஐரோப்பா செய்தி

ஒடேசா (Odessa) நகர மேயரின் உக்ரைன் குடியுரிமையை ரத்து செய்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy), ரஷ்ய பாஸ்போர்ட் வைத்திருப்பதாகக் கூறி, ஒடேசா (Odessa) மேயர் ஜெனடி ட்ருகானோவின் (Gennadiy Trukhanov) உக்ரைனிய குடியுரிமையை ரத்து செய்துள்ளார்.

மேலும், மிகப்பெரிய துறைமுக நகரமான ஒடேசாவை நடத்துவதற்கு உக்ரைன் தலைவர் ஒரு இராணுவ நிர்வாகத்தை நிறுவி உளவுத்துறை ஜெனரல் செர்ஹி லைசாக்கை (Serhii Lysak) தலைவராக நியமித்துள்ளார்.

இந்த புதிய பொறுப்பை ஏற்க, செர்ஹி லைசாக், இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக வகித்து வந்த டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் (Dnipropetrovsk) பிராந்தியத்தின் இராணுவ ஆளுநர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

“ஒடேசா மேயர் ஜெனடி ட்ருகானோவின் உக்ரைனிய குடியுரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது” என்று SBU பாதுகாப்பு சேவை ஜெலென்ஸ்கி கையெழுத்திட்ட ஆணையை மேற்கோள் காட்டி உறுதிப்படுத்தியுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!