நயினை அம்மனையும் வழிபட்ட ஜனாதிபதி!
யாழ்ப்பாணத்துக்கு நேற்று சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்றும் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார்.
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாக்களில் நேற்று ஜனாதிபதி பங்கேற்றதுடன், மக்களுடனும் சந்திப்புகளை நடத்தி இருந்தார்.
இன்று வீடமைப்பு திட்டத்தை ஆரம்பித்து வைத்ததுடன், ஆன்மீக வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.
நயினாதீவுக்குக் விமானத்தில் சென்ற ஜனாதிபதி, நாக விகாரையில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டார். விகாராதிபதியிடம் ஆசியும் பெற்றுக்கொண்டார்.
தையிட்டி உட்பட முக்கிய சில விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார் என தெரியவருகின்றது.
அதன்பின்னர் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
அமைச்சர்களான இராமலிங்கம் சந்திரசேகர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உள்ளிட்டவர்களும் சென்றிருந்தனர்.
வடக்கு விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை ஜனாதிபதி கொழும்பு திரும்புவார் என தெரியவருகின்றது.





