இலங்கை ஜனாதிபதி ஜெர்மனிக்கு விஜயம்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஜெர்மனி கூட்டாட்சி குடியரசிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தைத் தொடங்கி, பெர்லின் பிராண்டன்பர்க் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் நடத்தும் உத்தியோகபூர்வ வரவேற்பு விழா இன்று பிற்பகல் பெர்லினில் உள்ள பெல்லூவ் அரண்மனையில் நடைபெற உள்ளது,
அதைத் தொடர்ந்து இரு தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித் ஹேரத் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகள் குழுவும் உள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)