இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

தென்கொரியாவில் இராணுவ ஆட்சியை அறிவித்ததற்கு மன்னிப்பு கோரிய ஜனாதிபதி

தென்கொரியாவில் அராணுவ ஆட்சியை அறிவித்ததற்காக ஜனாதிபதி Yoon Suk Yeol மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பத்திற்கும் அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார். மீண்டும் இராணுவ ஆட்சியைப் பிரகடனம் செய்யப்போவதில்லை என்று ஜனாதிபதி உறுதியளித்தார்.

அரசாங்கத்தையும் ஆளுங்கட்சியையும் நம்புவதாகக் கூறிய அவர் அவர்கள் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றார்.

தம் மீது அரசியல் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டால் அவற்றைப் புறக்கணிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி யூன் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவது குறித்து நாடாளுமன்றம் வாக்களிக்கவிருக்கிறது.

அதற்கு முன்னர் ஜனாதிபதி தொலைக்காட்சி உரையாற்றியுள்ளார். இவ்வாரம் அவர் திடீரென இராணுவ ஆட்சியைப் பிரகடனம் செய்தார்.

பின்னர் 6 மணிநேரத்தில் அதனை மீட்டுக்கொள்வதாக அவரே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!