அமெரிக்காவை சென்றடைந்த ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்க நேரப்படி காலை 8:50 மணியளவில் அமெரிக்காவின் ஜான் எப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஜான் எப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியை, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர், ஜனாதிபதி வழக்கறிஞர் ஜெயந்த ஜெயசூரிய மற்றும் பலர் வரவேற்றனர்.
இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் உடன் உள்ளார்.
(Visited 4 times, 1 visits today)





