உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்காக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் சென்னை பயணம்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்கெடுக்க மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் சென்னை பயணம்.
மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் சென்னையில் நடைபெற இருக்கும் பதினொராவது(11) உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கெடுப்பதற்கு சென்னைக்கு பயணமாகிறார்.
யூலை மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரை சென்னை செம்மஞ்சேரியில் அமைந்துள்ள ஆசியவியல் நிறுவன வளாகத்தில் இம்மாநாடு இடம்பெறுகின்றது.
இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு ஐரோப்பியத் தமிழ் அறிஞர்களின் தமிழியல் ஆய்வுகள் தொடர்பான இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை அடிகளார் இம்மாநாட்டில் சமர்ப்பிக்கின்றார்.
(Visited 14 times, 1 visits today)