ஆசியா

பிரபோவோ பதவியேற்பு விழா; இந்தோனேஷியாவில் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்

எதிர்வரும் அக்டோபர் 20ஆம் திகதியன்று இந்தோனீசியாவின் புதிய அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பதவியேற்க இருக்கிறார்.துணை அதிபராக தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மகன் ஜிப்ரான் ராக்காபுமிங் ராக்கா பதவி ஏற்கிறார்.

பதவியேற்பு விழாவை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் பணிகளுக்காகத் தலைநகர் ஜகார்த்தாவில் குறைந்தது 100,000 காவல்துறை அதிகாரிகளும் ராணுவ வீரர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் அக்டோபர் 18ஆம் திகதியிலிருந்து அக்டோபர் 23ஆம் திகதி வரை அங்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவர்.

அவர்களில் தூரத்திலிருந்து மிகத் துல்லியமாகத் துப்பாக்கியால் சுடக்கூடிய அதிகாரிகளும் கலவரத் தடுப்பு அதிகாரிகளும் அடங்குவர் என்று இந்தோனீசிய ராணுவத் தலைவர் அகுஸ் சுபியாந்தோ தெரிவித்தார்.

பதவியேற்பு விழா இந்தோனீசிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும்.நாடாளுமன்றக் கட்டடம், அதிபர் மாளிகை, ஜகார்த்தாவில் உள்ள பிரதான சாலைகள் போன்ற முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!