3 லட்சம் பேரை பணயக் கைதியாக வைத்திருந்தார் பிரபாகரன்: மஹிந்த அணி குற்றச்சாட்டு!
“பிரபாகரன் 3 லட்சம் பேரை பணயக் கைதிகளாக வைத்திருந்தார். அவர்களில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேரை படையினர் காப்பாற்றினார்கள்.” – என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“இலங்கையில் போர் குற்றம், இனப்படுகொலை நடந்தது என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. அவ்வாறு நடக்கவில்லை.
பிரபாகரன்தான் 3 லட்சம் பேரை பணயக் கைதிகளாக வைத்திருந்தார். அவர்களில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேரை எமது படையினர் மீட்டனர்.
உலகில் அதிகளவு பணயக் கைதிகளை மீட்ட இராணுவம்தான் இலங்கை இராணுவமாகும்.
மீட்கப்பட்ட மக்கள் முறையாக மீள்குடியமர்த்தப்பட்டனர்.
இவ்வாறான மனிதாபிமான திட்டங்களுக்கு பிரிட்டனில் உள்ள தமிழ் மாணவ அமைப்புகள் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை.” எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.




