அமெரிக்காவை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி : 34 பேர் பரிதாபமாக பலி!

அமெரிக்காவின் தென்கிழக்கு பிராந்தியத்தை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளியில் சிக்கி 34 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மிசோரி மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அங்கு மட்டும் 12 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில், இந்த சூறாவளி கன்சாஸ், மிச்சிகன் மற்றும் இல்லினாய்ஸ் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்சாஸில் ஏற்பட்ட புழுதிப் புயலால் 55 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.
மிசோரி உட்பட ஐந்து மாநிலங்களில் 170,000 வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)