ஆசியா

தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 15 பேர் படுகாயம், இழப்புகள் குறித்து மதிப்பாய்வு!

தெற்கு தைவானில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இதனால் 15 பேர் லேசான காயங்களுக்கு உள்ளாகினர்.

உள்ளூர் நேரப்படி (திங்கட்கிழமை 1600 GMT) அதிகாலை 12:17 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தைவானின் மத்திய வானிலை நிர்வாகம் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைப் பதிவு செய்தது.

நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை, இருப்பினும் மீட்புப் பணியாளர்கள் இன்னும் சேதத்தை மதிப்பிடுகின்றனர்

தைவானின் தீயணைப்புத் துறை, 15 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

அவர்களில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் அடங்குவர், அவர்கள் தைனான் நகரின் நான்சி மாவட்டத்தில் இடிந்து விழுந்த வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!