பெருவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ஒருவர் பலி, பலர் படுகாயம்!

பெருவின் மத்திய கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், லிமா மற்றும் துறைமுக நகரமான கல்லாவோவை உலுக்கியதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், ஐந்து பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 11:35 மணிக்கு பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் மையப்பகுதி தலைநகர் லிமாவிற்கு மேற்கே கல்லாவோவிலிருந்து தென்மேற்கே 23 கிலோமீட்டர் (14 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
வடக்கு லிமாவில் கட்டுமானத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து ஒரு சுவர் பிரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் 05 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்த ஐந்து பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. சாலைகள் மற்றும் கல்வி மையங்களுக்கும் சேதம் ஏற்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.