தென் அமெரிக்கா

பெருவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ஒருவர் பலி, பலர் படுகாயம்!

பெருவின் மத்திய கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், லிமா மற்றும் துறைமுக நகரமான கல்லாவோவை உலுக்கியதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், ஐந்து பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 11:35 மணிக்கு பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் மையப்பகுதி தலைநகர் லிமாவிற்கு மேற்கே கல்லாவோவிலிருந்து தென்மேற்கே 23 கிலோமீட்டர் (14 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

வடக்கு லிமாவில் கட்டுமானத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து ஒரு சுவர் பிரிந்து  விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் 05 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்த ஐந்து பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. சாலைகள் மற்றும் கல்வி மையங்களுக்கும் சேதம் ஏற்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த