வட அமெரிக்கா

கனடாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் : அரசாங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

கனடா தபால் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் அண்மையில் வேலை நிறுத்தங்களை முன்னெடுத்திருந்த நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை தற்காலிகமாக பணிநீக்கம் செய்வதாக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் அந்த தற்காலிக பணிநீக்கம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (11.12) இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில், மத்தியஸ்த தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அவர்கள் தற்காலிக பணிநீக்கத்தில் இல்லை என்பதை கனடா போஸ்ட் அறிவிக்க வேண்டும் என்றும்  தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், கனடா போஸ்ட் தீர்மானத்தின் விதிமுறைகளின் கீழ், தேவைப்பட்டால் எதிர்காலத்தில் பணியாளர்களை மாற்றுவதற்கான உரிமையை கொண்டுள்ளது என்று கூறுகிறது.

55,000க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள  வேலைநிறுத்தம் நான்கு வாரங்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!