புனித பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு அறிவிக்கப்படாத விஜயத்தை மேற்கொண்ட போப் பிரான்ஸிஸ்!

ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு பிரார்த்தனை செய்வதற்கும், அங்கு கூடியிருந்த விசுவாசிகளில் சிலரை வாழ்த்துவதற்கும் போப் பிரான்சிஸ் சனிக்கிழமை புனித பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு ஒரு குறுகிய மற்றும் அறிவிக்கப்படாத விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
88 வயதான போப்பாண்டவர் சக்கர நாற்காலியில் தனது செவிலியருடன் முன்னிலையாகியிருந்தார். சுமார் கால் மணி நேரம் புனித பீட்டர் கல்லறையில் பிரார்த்தனை செய்ய நின்றதாக இத்தாலிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.
போப் தனது இல்லத்திற்குத் திரும்புவதற்கு முன்பு அங்கு கூடியிருந்தவர்களை வரவேற்றார்.
புனித வாரத்தின் போது போப்பின் சமீபத்திய பொதுத் தோற்றம் இதுவாகும். இதேவேளை கடந்த வியாழக்கிழமை ரோமில் உள்ள ஒரு சிறையில் சுமார் 70 கைதிகளைச் சந்தித்தார்.
மேலும் குருத்தோலை ஞாயிற்றுக்கிழமை புனித பீட்டர் சதுக்கத்தில் நடந்த ஒரு திருப்பலியிலும் போப் தோன்றி, வழிபாட்டிற்காகக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை வாழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.