ஐரோப்பா

போப் பிரான்சிஸிற்கு மீண்டும் சுவாசப் பிரச்சினை – மக்கள் பிரார்த்தனை

போப் பிரான்சிஸ் மீண்டும் உயிர்வாயு மூச்சுக் கவசத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாக வத்திகன் தெரிவித்திருக்கிறது.

நேற்று இரண்டு முறை கடுமையான சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு மூச்சுக் கவசம் வழங்கப்பட்டுள்ளது.

சிகிச்சையின்போது போப் விழிப்போடும் ஒருமித்த கவனத்தோடும் இருந்ததாகக் கூறிய வத்திகன் அவர் நன்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவித்தது.

நுரையீரல்கள் ரத்தத்துக்குப் போதுமான உயிர்வாயுவை அனுப்ப முடியாவிட்டால் அல்லது உடலில் மிதமிஞ்சிய கரியமில வாயு இருந்தால் கடுமையான சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது.

போப் பிரான்சிஸ் குணமடைவதில் இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நிமோனியா காய்ச்சலை எதிர்த்து அவர் 2 வாரத்துக்கு மேலாகப் போராடுகிறார்.

அவர் குணமடையப் பிரார்த்திப்பதற்கு உலகம் முழுவதுமிருந்து பலரும் ரோம் நகருக்குச் செல்கின்றனர்.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்