ஐரோப்பா

எளிமையான முறையில் மரப் பெட்டியில் அடக்கம் செய்யப்படும் போப் பிரான்சிஸின் நல்லுடல்

கத்தோலிக்கச் சமயத் தலைவர் போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலக மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

அவர் நேற்று காலை வத்திகனிலுள்ள Casa Santa Marta எனும் தமது இருப்பிடத்தில் காலமானார். அவருக்கு வயது 88ஆகுதம்.

வழக்கமாகக் கத்தோலிக்கச் சமயத் தலைவர்களின் இறுதிச் சடங்கு மிகவும் பாரம்பரியமாகவும் விரிவாகவும் நடைபெறும். ஆனால் தாம் மறைந்தபிறகு நடைபெறும் இறுதிச்சடங்கு மிகவும் எளிமையாக இருக்கவேண்டும் என்று அவர் ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்குமுன்னர் கத்தோலிக்கச் சமயத் தலைவர்கள் சைப்ரஸ், ஓக் மரக்கட்டைகளால் தயாரிக்கப்பட்ட 3 அடுக்குப் பெட்டிகளில் அடக்கம் செய்யப்பட்டனர்.

ஆனால் தமது உடல் துத்தநாகம் பூசப்பட்ட எளிய மரப் பெட்டியில் அடக்கம் செய்யப்படவேண்டும் என்று அவர் ஏற்கனவே குறித்துவைத்துள்ளார்.

பொதுமக்களின் பார்வைக்காகத் தமது நல்லுடலை St Peter’s தேவாலயத்தில் உயரமான இடத்தில் வைக்கும் பாரம்பரியத்தையும் அவர் அகற்றினார்.

அதற்குப் பதிலாக சவப்பெட்டிக்குள் தமது உடல் இருக்கும்போது அதன் மூடி அகற்றப்பட்ட நிலையில் பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார். நூறாண்டுக்கு மேலாக வத்திகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்படும் முதல் கத்தோலிக்கச் சமயத் தலைவர் போப் பிரான்சிஸ் ஆவார்.

ரோமிலுள்ள St Mary Major தேவாலயத்தில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

(Visited 21 times, 21 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்