இலங்கை

இலங்கை: போலி இலக்கத் தகடு விவகாரத்தில் அரசியல்வாதி கைது!

போலி இலக்கத் தகடு கொண்ட ஜீப் வண்டியை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தங்காலை பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபரை இன்று (15) கைது செய்துள்ளனர்.

குறித்த வாகனம் நேற்று பெலியத்த, புவக்தாண்டவ வீரசிங்க மாவத்தையில் உள்ள வீடொன்றிற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதே அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த வாகனம் தங்காலை பிரதேச சபையின் முன்னாள் உப தலைவரால் பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அசல் இலக்கத் தகடு கொண்ட வாகனம் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்ததையடுத்து, தங்காலை பிரதேச சபையின் முன்னாள் உப தலைவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

(Visited 11 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!