இலங்கை செய்தி

அரசியல் கட்சிக்குரிய அங்கீகாரம்: 78 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

அரசியல் கட்சியாக பதிவுசெய்யுமாறுகோரி 2025 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட 83 விண்ணப்பங்களில் 78 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியாக அங்கீகரிக்கத் தேவையான அடிப்படை அளவுகோல்களை பூர்த்தி செய்யத் தவறியதே பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய ஐந்து விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசியல் கட்சிக்குரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல் அரங்கம், சமத்துவ கட்சி மற்றும் புரட்சிகர மக்கள் சக்தி என்பனவே புதிதாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாகும்.

இவற்றுடன் இலங்கையில் தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!