அரசியல் கட்சிக்குரிய அங்கீகாரம்: 78 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!
அரசியல் கட்சியாக பதிவுசெய்யுமாறுகோரி 2025 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட 83 விண்ணப்பங்களில் 78 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியாக அங்கீகரிக்கத் தேவையான அடிப்படை அளவுகோல்களை பூர்த்தி செய்யத் தவறியதே பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய ஐந்து விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசியல் கட்சிக்குரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல் அரங்கம், சமத்துவ கட்சி மற்றும் புரட்சிகர மக்கள் சக்தி என்பனவே புதிதாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாகும்.
இவற்றுடன் இலங்கையில் தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.





