முக்கிய துறைகளில் அரசியல் தலையீடு: நாமல் குற்றச்சாட்டு!
பொலிஸாருக்கு அரசியல் ரீதியில் அழுத்தம் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa, எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், நீதித்துறையிலும் கையடிப்பதற்கு முயற்சிக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமது தேவைக்கேற்ப பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களம் என்பன செயல்பட வேண்டும் என அரசாங்கம் நினைத்துக்கொண்டிருப்பது தவறு எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
“ யதார்த்தம் என்னவென்பத புரிந்து அரசாங்கம் செயல்பட வேண்டும்.
தமது ஊழல், மோசடிகளை மூடிமறைப்பதற்காக என்மை விசாரணைக்கு அழைப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை.” என நாமல் ராஜபக்ச மேலும் கூறினார்.
அதேவேளை, இந்த ஆட்சியின்கீழ் அரசியல் ரீதியிலான அழுத்தங்கள் எதுவும் சுயாதீன துறைகளுக்கு பிறப்பிக்கப்படவில்லை என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தமக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைக்கு அரசியல் சாயம் பூசுவதற்கு முற்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.




