ஆசியா

சிங்கப்பூரில் WhatsApp Web தளத்தைப் பயன்படுத்துவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை!

சிங்கப்பூரில் WhatsApp Web தளத்தைப் பயன்படுத்த வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருந்தால், அது அதிகாரத்துவ இணையப்பக்கம் தானா என்பதை உறுதி செய்யுமாறு அது வலியுறுத்தியது.

WhatsApp Webஐப் பாவனை செய்யும் இணையப்பக்க மோசடிகள் குறித்து நினைவூட்டிய பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். போலிப் பக்கத்தில் வரும் QR குறியீட்டை ஸ்கேன் செய்யும்போது Whatsapp கணக்கு ஊடுருவப்படுகிறது.

அந்தக் கணக்கின் மூலம் ஒருவரின் உற்றார் உறவினரை மோசடிக்காரர்கள் தொடர்புகொண்டு நிதியுதவி கேட்கின்றனர். மோசடி என்பதை அறியாத உற்றார் உறவினர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்குப் பணம் மாற்றுகின்றனர்.

WhatsApp கணக்கின் உரிமையாளர் தாம் நிதியுதவி கேட்கவில்லை என்று கூறும்போது உண்மை தெரியவருகிறது. WhatsApp-இல் வரும் வழக்கத்திற்கு மாறான கோரிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content