இலங்கை

இலங்கையில் லொறி ஒன்றின் மீது துப்பாகிச்சூடு நடத்திய பொலிஸார்!

இலங்கை – சூரியவெவ, மீகஹஜதுர பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற லொறி ஒன்றின் மீது சூரியவெவ பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (27) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

லுனுகம்வெஹரவில் இருந்து சூரியவெவ நோக்கி லொறியை சோதனைக்காக நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்ட போதும் அதனை பொருட்படுத்தாமல் லொறியை ஓட்டிச் சென்ற போதே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், லொறியின் டயர் மீது துப்பாக்கி ரவை பாய்ந்ததையடுத்து லொறி நிறுத்தப்பட்டது.

இதன்போது, லொறியின் சாரதி சூரியவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியில் 17 மாடுகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)
See also  இலங்கை: 10 கிலோ அம்பர்கிரிஸை 200 மில்லியனுக்கு விற்க முயன்ற நபர் கைது
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content