ஐரோப்பா

பிரித்தானியா நோக்கி ஆபத்தான பயணம் – கடலில் தத்தளித்த 120 அகதிகள் கடலில் இருந்து மீட்பு

பிரித்தானியா நோக்கி ஆபத்தான பயணம் மேற்கொண்ட 120 அகதிகள் கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலக் கால்வாயூடாக பயணிக்க முயற்சித்தவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை நோர் மற்றும் பா-து-கலே மாவட்டங்களின் கடற்பிராந்தியம் வழியாக பல்வேறு சட்டவிரோத பயணங்கள் இடம்பெற்றன.

முதலாவது படகு 52 பேரை ஏற்றியவாறு பயணித்த நிலையில், படகில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டு அகதிகள் கடலில் தத்தளிக்க தொடங்கினர்.

அவர்களை CROSS Gris-Nez அமைப்பினர் மீட்டு கரைக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் இரண்டாவது படகில் 64 பேர் பயணித்த நிலையில், அவர்களது படகும் இயந்திரக்கோளாறுக்குள் சிக்கி, கடலில் தவித்து நிற்கத்தொடங்கினர். அவர்களையும் CROSS Gris-Nez அதிகாரிகள் மீட்டனர்.

இந்த சட்டவிரோத கடற்பயணங்களினால் இவ்வருடத்தில் இதுவரை 72 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 59 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!