இலங்கை

நேர்காணல் செய்யப்பட்ட நான்கு பேர் மர்மமான முறையில் கொலை! இலங்கை ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு பொலிஸ் பாதுகாப்பு

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்ததைத் தொடர்ந்து, நேர்காணலுக்கு வந்த நான்கு பேரின் மரணத்திற்கு மத்தியில் அவருக்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சமுதித சமரவிக்ரமவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார்

சமுதித சமரவிக்ரமவினால் நேர்காணல் செய்யப்பட்ட நான்கு பேர் அண்மைக்காலத்தில் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர்.

அண்மையில் மித்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கவலை தெரிவித்த சிரேஷ்ட ஊடகவியலாளர், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை எடுத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நீதிபதிகள் மற்றும் குறிப்பாக ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது கடும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் சமுதித சமரவிக்ரம போன்ற ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 4 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்