இலங்கை

வானை நோக்கி 38 தடவைகள் பொலிஸார் துப்பாக்கிச் சூடு! ஏற்பட்ட அமைதியின்மை

நுவரெலியா – ஹங்குரங்கெட்ட பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி 38 தடவைகள் சுட்டுள்ளனர்.

பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக திரண்டிருந்த சுமார் 200 பேர் கலவரமாகச் செயற்பட்டு பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 25ஆம் திகதி ஹங்குரங்கெட்ட தியாதிலகபுர பிரதேசத்தில் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 8 சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களை கைது செய்யுமாறு கோரி நேற்றிரவு சுமார் 200 பேர் ஹங்குரங்கேத்தி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேநேரம் சம்பவத்தில் உயிரிழந்தவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் தரப்பினரின் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 6 times, 1 visits today)
See also  இஸ்ரேலில் பணிபுரிந்து வந்த இலங்கையர் தற்கொலை
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content