அனுராதபுரதில் மனைவியை சித்திரவதை செய்து வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
மனைவியை தாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரத்தைச் சேர்ந்த 38 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதேவேளை, சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிளால் அவரது 13 வயது மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டாரா என்பது தொடர்பிலும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.
(Visited 19 times, 1 visits today)





