தென்கொரிய ஜனாதிபதி அலுவலகத்தில் சிறப்பு சோதனை நடத்திய பொலிஸார்!

தென் கொரிய பொலிசார் இன்று (11.12) ஜனாதிபதி அலுவலகத்தில் சோதனை நடத்தியதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் யோல், அவர் கைது செய்யப்படவில்லை அல்லது அதிகாரிகளால் விசாரிக்கப்படவில்லை என்றாலும் இராணுவச் சட்டத்தை தவறாக பயன்படுத்தியமைக்காக குற்றவியல் விசாரணைக்கு உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறப்பு புலனாய்வுக் குழு ஜனாதிபதி அலுவலகம், தேசிய போலீஸ் ஏஜென்சி, சியோல் மெட்ரோபொலிட்டன் போலீஸ் ஏஜென்சி மற்றும் தேசிய சட்டமன்ற பாதுகாப்பு சேவை ஆகியவற்றில் சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 18 times, 1 visits today)