இலங்கையில் தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவரை கைது செய்த பொலிஸார்

பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கர் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெலிகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஸ்தென்ன பிரதேசத்தில் வெலிகந்த பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (2) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 47 மற்றும் 50 வயதுடைய வெலிகந்த பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 17 times, 1 visits today)