இந்தியா

இந்தியாவில் வங்கி பணத்தை திருடி சூதாடிய மேலாளர் – கைது செய்த பொலிஸார்

பீகாரில் இருக்கும் ‘கோட்​டக் மகேந்​திரா’ வங்​கி​யின் கிளை ஒன்றில் மேலா​ளராகப் பணியாற்றிய நபர் ஒருவர், வங்கிப் பணத்தை எடுத்து சூதாடியதாகக் கூறப்பட்டது.

பந்தய, சூதாட்டச் செயலிக்கு அடிமையான அந்த ஆடவர் கடந்த ஈராண்டுகளாகப் பீகார் அரசின் வங்​கிக் கணக்​கி​லிருந்து கோடிக்​கணக்​கான பணத்தைத் திருடி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்​பாக, பீகார் அரசின் மாவட்ட நிலம் கையகப்​படுத்​தும் பணியில் இருக்கும் அதி​காரிக்​கான காசோலைகளில் போலி கையெழுத்து இட்டும் போலி காசோலைகளைத் தயாரித்தும் அந்த நபர் மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

மொத்​தம் ரூ.31.93 கோடி வங்கி பணத்தை அந்த மேலாளர் சுருட்டியதாகச் சொல்லப்பட்டது

பிடிப​டா​மல் இருக்க, வாடிக்​கை​யாளர்​களின் ஆதார் விவரங்​களைச் சட்​ட​விரோத​மாகப் பயன்​படுத்தி 21 போலி வங்​கிக் கணக்​கு​களை அவர் திறந்ததாகவும் அவற்றில் பணத்தை பரி​மாற்​றம் செய்​து, அந்​தப் பணத்தை வெளி​நாடு​களில் உள்ள சட்​ட​விரோத பந்தயச் செயலிகளுக்கு அனுப்பியதாகவும் கூறப்பட்டது.

மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளரைக் காவல்துறை கைதுசெய்தது.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
Skip to content