ஐரோப்பா

போலந்தின் ரயில் பாதை தகர்ப்பு – ரஷ்யா மீது குற்றச்சாட்டு!

போலந்தில்  ரயில் பாதையை வெடிக்கச் செய்ய ரஷ்ய ரகசிய சேவைகள் உத்தரவிட்டதாக சில ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தகவலை போலந்தின் பாதுகாப்பு சேவைகள் அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் ஜேசெக் டோப்ர்சின்ஸ்கி (Jacek Dobrzyński)  இன்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் போலந்தின்  கிழக்கு பகுதியில் உள்ள ரயில்வே மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை சரிபார்க்க இராணுவ ரோந்துப் படையினர் அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே போலந்தின் பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) இந்த சம்பவத்தை  முன்னோடியில்லாத நாசவேலைச் செயல்” என்று விவரித்துள்ளார்.

போலந்தின் தலைநகரான வார்சாவை உக்ரைன் எல்லையுடன் இணைக்கும் ரயில் பாதையே இவ்வாறு வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

அந்த ரயில் பாதை உக்ரைனுக்கு உதவிகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது என்று போலந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலுக்கு ரஷ்யா காரணமாக இருக்கலாம் என முன்பு சந்தேகிக்கப்பட்டிருந்த நிலையில் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!