ஐரோப்பா

பிரான்ஸில் பிறந்து 17 நாட்களே ஆன குழந்தையை கடத்திய விஷமிகள் : தேடுதல் வேட்டையில் பொலிஸார்!

பிரான்ஸ் – பாரீஸ் மருத்துவமனையின் மகப்பேறு வார்டில் இருந்து பிறந்து 17 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பாரிஸில் உள்ள Seine-Saint-Denis இல் உள்ள காவல் துறையினர் இது தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.

குறித்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாகவும், ஆகையால் முறையான சிகிச்சைகள் தேவை எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குழந்தையின் 23 வயது தந்தை மற்றும் 25 வயது தாயார் மட்டுமே சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டதாக கூறிய பொலிஸார் அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள  ஒரு தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்டுள்ளது.

(Visited 36 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!