இந்தியா

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க எகிப்து அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு

இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டிற்கு வருகை தருமாறு எகிப்து அதிபர் சிசிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று எகிப்து சென்றார்.

அவர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் எகிப்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,

எகிப்து அதிபர் அப்துல் பஹாத் எல் சிசியின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி எகிப்து விஜயம் செய்துள்ளார்.

பிரதமர் மோடியின் முதல் எகிப்து பயணம் இதுவாகும். நேற்று மதியம் எகிப்து சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் அந்நாட்டு பிரதமர் உற்சாக வரவேற்பு அளித்தார். ராணுவ அணிவகுப்பு உள்ளிட்ட சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது.

இதையடுத்து பிரதமர் மோடிக்கு இன்று எகிப்து அதிபர் சிசி ஆர்டர் ஆஃப் தி நைல் விருது வழங்கி கவுரவித்தார். இது எகிப்தின் மிக உயரிய விருது. இந்த அங்கீகாரம் இரு நாடுகளுக்கும் இரு சமூகங்களுக்கும் இடையே ஆழமான வேரூன்றிய நட்புறவை அடையாளப்படுத்துவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்த பயணத்தின் போது செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு எகிப்து அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

(Visited 10 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!