சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு அசாதாரணமான ஆட்டம் மற்றும் ஒரு அசாதாரணமான முடிவு. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வீட்டிற்கு கொண்டு வந்ததற்காக எங்கள் கிரிக்கெட் அணியைப் பற்றி பெருமைப்படுகிறோம்.
அவர்கள் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அற்புதமான ஒட்டுமொத்த அணிக்கு வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
அவரை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள்.
சிறப்பாக விளையாடிய நியூசிலாந்துக்கும் வாழ்த்துகள். ரோகித்தும், அவரது அணியினரும், சூழலுக்கு ஏற்ப தொடர் முழுதும் சிறப்பாக விளையாடினர் என தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், துபாயில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்திய அணியின் வெற்றி பயணம் தொடரட்டும் என தெரிவித்துள்ளார்.