ஐரோப்பா

ஜேர்மனியில் நடுவானில் கொந்தளிப்பை சந்தித்த விமானம் : அவசரமாக தரையிறக்கம்!

ஜேர்மனியில் ஏற்பட்ட கடுமையான புயல் காரணமாக ரியானேர் விமானம் அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த புயலால் 09 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

179 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன் பெர்லினில் இருந்து மிலனுக்குப் பயணித்த விமானம், இரவு 8:30 மணியளவில் மிகவும் கடுமையான கொந்தளிப்பை சந்தித்ததால், அவசரமான தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானி பவேரியாவில் உள்ள மெம்மிங்கன் விமான நிலையத்தில் திட்டமிடப்படாத தரையிறக்கத்தை மேற்கொண்டுள்ளார்.  இதன்போது எட்டு பயணிகள் மற்றும் ஒரு பணியாளர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று பேர் சிகிச்சைக்காக மெம்மிங்கனில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்; காயமடைந்த மற்றவர்கள் வெளிநோயாளர் சிகிச்சைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

 

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
Skip to content