மத்திய கிழக்கு

ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேலில் இராணுவ நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் திட்டம்

இராணுவ நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை நேற்று இரவு கூடி இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்ச்சியாகப் பல மாதங்களுக்குத் தரைவழித் தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு அமைச்சர்கள் ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காசாவை கைப்பற்றுவதும், கைப்பற்றிய பிரதேசங்களைக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதும் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயல்பாட்டிற்கு அமைய இஸ்ரேலிய இராணுவம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், பல்லாயிரக்கணக்கான விசேட துணை படையணிகளும் நிரந்தர சேவைக்காக அழைக்கப்பட்டுள்ளன.

மிகுதியாகவுள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை மீட்பதுடன், ஹமாஸை தோற்கடிக்கும் நோக்கத்துடன், தொடர்ச்சியாக அழுத்தங்களை இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த வாரம் சம்பந்தப்பட்ட பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டதன் பின்னரே தாக்குதல்கள் முன்னெடுக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய அமைச்சரவை கொள்கையளவில் தொண்டு நிறுவனங்களினூடாக மனிதாபிமான உதவிகளை மீண்டும் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேவேளை, கடந்த இரு மாதங்களாக இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் முற்றுகையினை முடிவிற்குக் கொண்டு வருவதன் அவசியம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி வருகிறது.

அதனைத் தவறும் பட்சத்தில் முற்றுகைக்கு உள்ளாகியுள்ள மக்கள் பாரிய உணவுப் பற்றாக்குறையினை எதிர்கொள்வர் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.