நைஜரில் உள்ள பிரஞ்சு குடிமக்களை வெளியேற்ற திட்டம்!
நைஜரில் உள்ள பிரெஞ்சு குடிமக்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்று நைஜரில் உள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் தூதரகத்தின் கூற்றுப்படி, அவர்களை விமானம் மூலம் பிரான்சுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
நைஜரில் சமீபத்திய போராட்டங்களின் போது, நைஜரின் பாதுகாப்புப் படைகள் அதிபர் முகமது பாசுமின் ஆட்சியில் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டன.
ஆனால் நைஜரில் ஏற்கனவே போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





