இந்தியா

காஷ்மீரில் யாத்திரைக்குச் சென்ற பேருந்து விபத்து : 10 பேர் பலி!

காஷ்மீரில் உள்ள புனித தலமொன்றுக்கு யாத்திரைச் சென்ற பேருந்தொன்று இமயமலைப் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 55 பேர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

வட மாநிலமான பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரத்திலிருந்து கத்ரா நகருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து, ஜம்மு நகருக்கு அருகே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதாக  போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உள்ளூர் போலீஸ் அதிகாரி சந்தன் கோஹ்லி செய்தியாளர்களிடம் கூறுகையில்,  இறந்தவர்கள் இந்தியாவின் கிழக்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் விபத்துக் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 19 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!