இலங்கை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக மனு ; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்மானம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணை செய்வதில்லை என உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (19) தீர்மானித்துள்ளது.

சட்டமா அதிபர் தரப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின்புள்ளே முன்வைத்த காரணங்களை கவனத்தில் கொண்டு உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்மானித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முர்து பெர்னாண்டோ மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி தநெரின் புள்ளே, இந்தச் சட்டமூலம் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்ததாக நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!