கட்டுநாயக்க விமானத்தில் சிக்கிய நபர் – சோதனையில் சிக்கிய பொருட்கள்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் ஏலக்காய்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் நேற்று காலை இந்தியாவில் இருந்து நாட்டிற்கு வந்த போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விமான நிலைய பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் 61 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரிடம் 21 கிலோ கிராம் ஏலக்காய் இருந்ததாகவும், ஒரு கிலோகிராம் ஒன்றின் பெறுமதி 12,000 ரூபா எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதுடன், அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 11 times, 1 visits today)