இலங்கையில் உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் சட்டமூலத்தை உருவாக்க அனுமதி

இலங்கையில் உடல் ரீதியான தண்டனையைத் தடை செய்வதற்கான சட்டமூலத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை – கொள்கை ரீதியான அனுமதியை வழங்கியுள்ளது.
உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்தும் – அனைத்து வகையான தண்டனைகளையும் தடை செய்வதற்கான விதிகளை ஏற்படுத்தும் வகையில், 1979ஆம் ஆண்டு 15 ஆம் எண் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு, முந்தைய அரசாங்கம் ஏப்ரல் 2024 இல் அமைச்சரவை அங்கிகாரத்தை வழங்கியிருந்தது.
அதன்படி, நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்தும் தண்டனைகளைத் தடை செய்வதற்கான, திருத்தங்களுடனான சட்டமூலத்தை உருவாக்கும் பொருட்டு, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
(Visited 1 times, 1 visits today)