இலங்கை

இலங்கையில் உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் சட்டமூலத்தை உருவாக்க அனுமதி

இலங்கையில் உடல் ரீதியான தண்டனையைத் தடை செய்வதற்கான சட்டமூலத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை – கொள்கை ரீதியான அனுமதியை வழங்கியுள்ளது.

உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்தும் – அனைத்து வகையான தண்டனைகளையும் தடை செய்வதற்கான விதிகளை ஏற்படுத்தும் வகையில், 1979ஆம் ஆண்டு 15 ஆம் எண் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு, முந்தைய அரசாங்கம் ஏப்ரல் 2024 இல் அமைச்சரவை அங்கிகாரத்தை வழங்கியிருந்தது.

அதன்படி, நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்தும் தண்டனைகளைத் தடை செய்வதற்கான, திருத்தங்களுடனான சட்டமூலத்தை உருவாக்கும் பொருட்டு, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!