இலங்கை

குளிப்பதை தவிர்க்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

அனர்த்தம் ஏற்பட்ட இடங்களுக்குச் செல்வது மிகவும் ஆபத்தானது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வலுவான நீரோட்டத்துடன் பாயும் நீரினுள் குளிப்பதையோ அல்லது நுழைவதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என்றும், ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அவை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர இலக்கமான 117 ஊடாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கனமழை காரணமாக மண் தளர்வுற்றிருப்பதால் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு அவர் எச்சரித்தார்.

இதனால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டால், உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!