ஐரோப்பா

பிரித்தானியாவில் உடல் பருமனால் போராடும் மக்கள்! பிரதமரின் அதிரடி நடவடிக்கை

பிரித்தானியாவில் உடல்பருமன் காரணமாக இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது.

தேசிய சுகாதார சேவை தரவுகளின்படி இந்த விடயம் தெரிவித்துள்ளது.

இதனால், அதிக நோயாளிகளை சமாளிக்க முடியாமல் தேசிய சுகாதார சேவை அமைப்பு தடுமாறுகிறது.

இந்நிலையில் உடல் பருமனை குறைக்கும் மருந்துகளை மருத்துவமனைக்கு வெளியேயும் வழங்கும் வகையில் 2 ஆண்டு சோதனை திட்டத்தை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

உடல் பருமனுக்கு எதிரான மருந்துகளை வழங்கும் வகையிலான 2 ஆண்டு சோதனை திட்டத்தை பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்துள்ளார்.

40மில்லியன் பவுண்ட் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தொடர்ந்து பேசிய பிரதமர் ரிஷி சுனக், “உடல் பருமன் தேசிய சுகாதார சேவை மீது மிகுந்த அழுத்தத்தை உருவாக்குகிறது.

உடல் எடையை குறைக்க மக்களுக்கு உதவும் வகையில் சமீபத்திய மருந்துகளை பயன்படுத்துவதன் மூலமாக, உடல் பருமனால் ஏற்படும் உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களை தவிர்த்து மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உதவ முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content