ஐரோப்பா

பிரான்சில் நஹெலை கொலை செய்த பொலிஸ் அதிகாரிக்கு ஆதரவாக 01 மில்லியன் நிதி திரட்டிய மக்கள்!

பிரான்ஸில் நஹெல் என்ற ஆப்பிரிக்க இளைஞர் போக்குவரத்து விதிகளை மீறியதாக தெரிவித்து பொலிஸ் அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதனையடுத்து பிரான்ஸ் முழுவதும் கலவரங்கள் வெடித்தன. பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையத்தில் வைரலாகி வரும் வீடியோக்களில் பிரான் முழுவதும் போர்களமாக காட்சியளிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

இதற்கிடையே நஹெலை சுட்டுக் கொலை செய்த பிரஞ்சு அதிகாரியான ஃப்ளோரியனிற்கும் ஆதரவு அதிகரித்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக சில சிலர் நிதி சேகரித்துள்ளனர்.

இதன்படி இதுவரையில் பொலிஸ் அதிகாரிக்கு ஆதரவாக ஒரு மில்லியன் யூரோ கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த நஹெலை விட, பொலிஸ் அதிகாரிக்கு அதிகளவு நிதி கிடைக்கப்பெற்றுள்ளது பல விமர்சனங்களை கொண்டுவந்துள்ளது.  இது ஒரு அவமானமான செயல் என இடதுசாரி கட்சிகள் விமர்சித்துள்ளன.

நஹலின் பாட்டி, காவலருக்குக் காட்டப்பட்ட ஆதரவைக் கண்டு “மனம் உடைந்ததாக” கூறினார்.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!